தீராத வயிற்று வலியால் விஷமருந்தி மூதாட்டி தற்கொலை

 

தா.பழூர், ஜூன் 26: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சந்திரபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல் இவரது மனைவி பழனியம்மாள் (68). தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். தீவிர சிகிச்சை அளித்தும் குணமாகாததால் வீட்டில் யாரும் இல்லாதபோது பழனியம்மாள் விஷமருந்தி வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதனைக் கண்ட உறவினர்கள் பழனியம்மாளை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனியம்மான் உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்