தீயில் கருகி 25 ஆடுகள் பலி

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அடுத்த ஒரத்தி அருகே அனந்தமங்கலம் கிராமம்  ஜெஜெ நகர் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி விஜயா.  இவர்கள் 25க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்க்கின்றனர். மாலைவீட்டின் அருகே  பட்டியில் ஆடுகளை அடைத்தனர். இந்நிலையில் நள்ளிரவு ஆடுகளின் அலறல்  சத்தம்கேட்டு ராமு, திடுக்கிட்டு எழுந்தார். வெளியே வந்து பார்த்தபோது, பட்டி  தீப்பிடித்து எரிந்துகொண்டு இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்,  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றார்.  அப்போது, தீயின் நடுவே சிக்கிய ஆடுகள் அலறி துடித்தன. ஆனால், தீயை  அணைக்க முடியவில்லை. இதனால் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 25 ஆடுகளும்  தீயில் கருகி பரிதாபமாக இறந்தன. இதை பார்த்து ராமு, விஜயா. கதறி அழுதனர்.தகவலறிந்து மதுராந்தகம் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு ெசன்று  விசாரித்தனர். மேலும், மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்  விரோதம் காரணமாக, யாரேனும் தீ வைத்தார்களா, அல்லது  மர்மநபர்கள் ஆட்டு  பட்டிக்கு தீ வைத்தார்களா தீவிரமாக விசாரிக்கின்றனர்….

Related posts

திருத்தணி முருகன் கோயிலில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சிமென்ட் கலவை லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு