தீபிகா படுகோனுக்கு நெஞ்சு வலி

ஐதராபாத்: நடிகை தீபிகா படுகோனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திய அளவில் புகழ்பெற்ற முன்னணி நடிகைகளில் ஒருவர், தீபிகா படுகோன் (36). தமிழில் ரஜினிகாந்துடன் இணைந்து ‘கோச்சடையான்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது அவர் நாக் அஸ்வின் இயக்கும் பான் இந்தியா படம் ஒன்றில் பிரபாஸ் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது தீபிகா படுகோனுக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு படபடப்பு அதிகரித்தது. இதையறிந்த படப்பிடிப்புக் குழுவினர் உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, தீபிகா படுகோனை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த பிறகு அவரது உடல்நிலை தேறியது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தீபிகா படுகோன், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருகிறார் என்று ெதலுங்கு படவுலக வட்டாரங்கள் தெரிவித்தன. …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்