தீபாவளி சீட்டு நடத்தி ரூ44 லட்சம் மோசடி: பெண் கைது

சென்னை: வியாசர்பாடி பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ44 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பரை தேடி வருகின்றனர். வியாசர்பாடி கரிமேடு 1வது தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி (43). இவர், அதே பகுதியை சேர்ந்த சுகன்யா (43) என்பவரிடம், கடந்த 2018ம் ஆண்டு முதல், தீபாவளி சீட்டு மற்றும் மாத சீட்டு கட்டி வந்துள்ளார். இவரைப்போன்று அந்த பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் சுகன்யாவிடம் சீட்டு பணம் கட்டி வந்துள்ளனர்.இந்தநிலையில், சீட்டு கட்டி முடித்தவர்களுக்கு முதிர்வு தொகையை சுகன்யா திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது. சீட்டு கட்டியவர்கள் பலமுறை சென்று பணத்தை கேட்டபோது சுகன்யா, ‘‘சீட்டு பிடித்ததில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. வீட்டை விற்று பணம் தருகிறேன்’’ என கூறியதாக தெரிகிறது. இப்படியாக கடந்த 4 வருடங்கள் கடந்த பின்னரும் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளார். இதையடுத்து பணம் கட்டி ஏமாந்த 20க்கும் மேற்பட்டோர் எம்கேபி.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் விசாரணை நடத்தியதில் சுகன்யா, அவரது நண்பர் வேளாங்கண்ணி ஆகியோர் சீட்டு நடத்தி ரூ44 லட்சம் வரை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுகன்யாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள வேளாங்கண்ணியை தேடி வருகின்றனர்….

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது