Thursday, June 27, 2024
Home » (தி.மலை) மாமியாரின் மண்டை உடைத்த மருமகனுக்கு வலை வந்தவாசி அருகே சண்டையை தடுத்த

(தி.மலை) மாமியாரின் மண்டை உடைத்த மருமகனுக்கு வலை வந்தவாசி அருகே சண்டையை தடுத்த

by Karthik Yash

வந்தவாசி, ஏப்.29: வந்தவாசி அருகே மாமியாரின் மண்டையை உடைத்த மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.வந்தவாசி அடுத்த பந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பவுனம்மாள்(60). இவர்களது மகள் சங்கீதா. இவரை, பாஞ்சரை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ்(34) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். குடிப்பழக்கம் உள்ள ரமேஷ் பந்தமங்கலம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிலேயே வசித்து வருகிறாராம்.இந்நிலையில், கடந்த 22ம் தேதி ரமேஷ் தனது மனைவி சங்கீதாவுடன் ஏற்பட்ட தகராறில் சரமாரியாக தாக்கினாராம். இதை கண்ட பவுனம்மாள் தடுத்துள்ளார். அப்போது, ரமேஷ் அருகே இருந்த கல்லை எடுத்து மாமியார் பவுனம்மாள் தலை மீது தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த அவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதுகுறித்து பவுனம்மாளின் கணவர் ஆறுமுகம் நேற்று முன்தினம் வடவணக்கம்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள ரமேஷை வலைவீசி தேடி வருகிறார்.

You may also like

Leave a Comment

four × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi