திருப்பூர், ஜூலை 23: தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ தங்கம் ஜூவல்லரி, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் பத்மா சிவலிங்கம் கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்தார்.
காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த கண் சிகிச்சை முகாமில் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் கண் அறுவை சிகிச்சை பிரச்னை உள்ளவர்கள் மட்டும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண்களை பாதுகாப்பாக வைப்பது, பராமரிப்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.