தில்சாத்கார்டன் குடோனில் பயங்கர தீ

புதுடெல்லி: தில்சாத்கார்டன் குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி தில்சாத்கார்டன் தொழிற்சாலை பகுதியில் 4 அடுக்கு மாடி பொருட்கள் குடோன் உள்ளது. இதில் 3வது மாடியில் வேதியியல் பொருள் கலந்த டேப் வைக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டிடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 15 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.  இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. நல்ல வேளையாக குடோனில் அந்த சமயம் யாரும் இல்லை. இதனால் உயிர் இழப்பு இல்லை. பக்கத்து கட்டிடங்களில் வசித்தவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் 13 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை தீவிரப்படுத்தின. பிற்பகல் 2 மணி அளவில் தீ கட்டுக்குள் வந்தது. …

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு