திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

 

காரைக்குடி, ஜூலை 25: கரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு முபா அகாடமி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் சசிகுமார் வரவேற்றார். பயிற்சியாளர்கள் அஸ்வத் பாபு, அன்பரசன், ஜெயகுமார் ஆகியோர் பயிற்சியளித்தனர். தலைமைப்பண்பு, நேர்முகத் தேர்வுக்கான நுணுக்கங்கள் உள்பட பல்வேறு பயிற்சியளிக்கப்பட்டது. 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மின்னியல் துறைத் தலைவர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை