திருவொற்றியூர், ஏப். 13: சென்னை கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு முகாம் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். முகாமில் ஓய்வூதியம், மூன்று சக்கர வண்டி, தையல் இயந்திரம், இலவச வீடு, வேலைவாய்ப்பு, அடையாள அட்டை கோரி 70க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். குறைதீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு, விரைவில் பயனாளிகளுக்கு வேண்டிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில், திருவொற்றியூர் தாசில்தார், கிராம அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.