திருவையாறு, ஆக. 7: திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ராஜபாளையம் குற்றாலநாதர் உழவாரப்பணிக்குழு, சேலம் அருணை உழவாரப்பணிக்குழு சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது. திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ராஜபாளையம் குற்றாலநாதர் உழவரப்பணி பொன்னுதாயி சிவா, சேலம் அருணை உழவாரப்பணி ஜெயக்குமார் தலைமையில் 400 பேர் கொண்ட குழுவினர் ஐயாறப்பர் கோயில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்தும் கோவில் பாத்திரங்கள், திருவாட்சி, வெங்கல விளக்குகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவைகளை சுத்தம் செய்து உழவாரப்பணிகள் மேற்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நடுக்காவேரி சிவனடியார் கூட்டம் ஆதி, மணிகண்டன், சுபாஷ், புனவாசல் சிவனடியார் கூட்டம் மதுரம் அம்மா மற்றும் சிவனடியார் கூட்டத்தினர் செய்திருந்தனர்.
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் உழவாரப்பணி
previous post