திருவையாறு: திருவையாறு அடுத்த கடுவெளியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் பாண்டி(26), கடுவெளி கூத்தாடி மதகை சேர்ந்த பாலையன் மகன் முரளி(24). இவர்கள் இருவரும் இரண்டு மாட்டு வண்டியில் கூத்தாடி மதகு காவிரி ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணலை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு மெயின்ரோட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியிலிருந்து மருவூர் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையிலான போலீசாரை கண்டதும் இருவரும் மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து மருவூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.