Tuesday, September 17, 2024
Home » திருவையாறு அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

திருவையாறு அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

by Arun Kumar

 

திருவையாறு, ஜுலை 25: திருவையாறு அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கிவைத்தார். திருவையாறு அடுத்த திருப்பழனம் உள்ளிட்ட 7 ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தாட்கோ மாவட்ட மேலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமர்த்தி, ஒன்றிய குழு தலைவர் அரசாபகரன் முன்னிலை வகித்தனர். திருப்பழனம் ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயசுதாபிரபாகரன் வரவேற்றார். மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

முகாமில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றனர். அந்தந்த துறைக்கு அனுப்பப்பட்டு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில் தாசில்தார் தர்மராஜ், ஒன்றிய ஆணையர்கள் சங்கரி, பொற்செல்வி, மாவட்ட கவுன்சிலர் வெங்கடசாமி, ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர் ஊராட்சி தலைவர்கள் திருப்பழனம் ஜெயசுதாபிரபாகரன், ராயப்பேட்டை விஜயகுமாரி வெங்கடாசலம், காகுடி கவிதாகிருஷ்ணமூர்த்தி, விளாங்குடி கதிர்காமம், புனவாசல் புகழேந்தி, பெரம்பூர் முருகானந்தம், செம்மங்குடி அம்சவல்லி இளங்கோவன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi