திருவையாறு: திருவையாறு அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் திடீர் மரணம் அடைந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசார் புகார் செய்யப்பட்டுள்ளது. திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி அற்புதமாதாகோவில் தெருவை சேர்ந்த சார்லஸ் மகன் விவேக்(35) சென்டிரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு தஞ்சாவூரை அடுத்த கரந்தை சருக்கை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த கிருபையன் மகள் மார்த்தாள் மேரி (29) என்பவரை கடந்த 20.08.2023 அன்று திருமணம் செய்து கொண்டார்.