திருவையாறில் அரசு முழு நேர கிளை நூலகத்திற்கு கட்டிடம் கட்ட இடத்தை டி.ஆர்.ஓ. ஆய்வு

 

திருவையாறு, செப். 25: திருவையாறு அரசு முழு நேர கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை டிஆர்ஓ தியாகராஜன் ஆய்வு செய்து வருவாய் துறையினரிடம் விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் டிஆர்ஓ தியாகராஜன் கூறியதாவது,

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று திருமஞ்சன வீதியிலுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் 10 சென்ட் இடத்தை தஞ்சாவூர் மாவட்ட நூலகத்துறைக்கு வழங்குவதற்கு பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின் போது தாசில்தார் தர்மராஜ், துணை தாசில்தார் ராஜ்குமார், வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி சர்வேயர் செந்தில்குமார் துணை சர்வேயர் கோதண்டபாணி கிளை நூலகர் காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு