திருவேற்காடு கோயிலில் சசிகலா சிறப்பு தரிசனம்

பூந்தமல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனையை கர்நாடக சிறையில் அனுபவித்தார். தண்டனை காலம் முடிந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் விடுதலையாகி சென்னை வந்த சசிகலா, அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்குவதாக அறிவித்தார். பின்பு, தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு வந்த சசிகலா, கோயிலுக்குள் மூலவர் அம்மன், உற்சவர் அம்மன், பிரத்தியங்கிரா தேவி உள்பட அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு செய்தார். இதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற 108 சங்காபிஷேக பூஜையில் சசிகலா பங்கேற்றார். அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் எலுமிச்சை பழ மாலையை பிரசாதமாக அளித்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை