திருவிடைமருதூர் அருகே சிறுமியிடம் சில்மிஷம் கூலித்தொழிலாளி கைது

 

திருவிடைமருதூர், ஆக. 25: திருவிடைமருதூர் அடுத்துள்ள திருநாகேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65) கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் கடந்த ஒரு மாதமாக சில்மிஷம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சியாமளா, திருவிடைமருதூர் எஸ்.ஐ தன்ராஜ், திருநீலக்குடி சிறப்பு எஸ்ஐ முருகானந்தம் ஆகியோர் விசாரணை நடத்தினர். ராஜேந்திரனை நேற்று கைது செய்தனர். பின்னர் திருவிடைமருதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திரன் புதுக்கோட்டை சிறையில்அடைக்கப்பட்டார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை