சென்னை, ஜூன் 25: பேரவையில் உயர், பள்ளிக்கல்வி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக்கோரிக்கையின் போது, திருவிக நகர் எம்எல்ஏ ப.தாயகம்கவி (திமுக) பேசியதாவது: திருவிக நகர் தொகுதியில் அரசு கலை கல்லூரி அமைத்து தரவேண்டும். திருவிக நகர் தொகுதி மக்கள் பெரம்பூர், புரசைவாக்கம், அயனாவரம் என்று 3 தாலுகாவுக்கு பிரிந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், கால விரயம், அலைச்சலால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு தீர்வாக, இந்த தொகுதி மக்கள் அனைவரும் ஒரே தாலுகாவை பயன்படுத்த வழிவகை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.