Sunday, October 6, 2024
Home » திருவாரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை குன்னலூர் – தர்க்காசு சாலையை சீரமைக்க வேண்டும்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை குன்னலூர் – தர்க்காசு சாலையை சீரமைக்க வேண்டும்

by MuthuKumar

முத்துப்பேட்டை, ஏப். 21: முத்துப்பேட்டை அருகே குன்னலூர் – தர்க்காசு சாலையை சீரமைக்க வேண்டும். சாலையை கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி குன்னலூர் தர்க்காசு இணைப்பு சாலை என்பது கற்பகநாதர் குளம் கிராமம் சென்று அடையும் சுமார் 4 கிலோ மீட்டர் சாலையாகும்.

இந்த சாலை இப்பகுதி மக்களின் முக்கிய சாலையாகும். இந்த சாலை போட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இவ்வழியாக இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுபகுதி கிராம மக்கள், அதேபோல் தொலைதூரம் செல்ல இவ்வழியாக வந்து பாண்டி பஸ் நிறுத்தத்திற்கு சென்று முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கும், தொடர்ந்து தொலை தூரங்களுக்கும் பொதுமக்கள் செல்லவேண்டும். குறிப்பாக, பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், அதேபோன்று சுற்று பகுதியை சேர்ந்த மக்கள் தொலைதூரம் செல்ல இவ்வழியாகதான் வந்து கடைதெருவுக்கு வரவேண்டும். இதேபோல், அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் சாகுபடி வயலுக்கு இவ்வழியாக தான் செல்ல வேண்டும்.

குறிப்பாக, சுற்று பகுதி கிராம விவசாயிகள் தாங்கள் சாகுபடி வயல்களுக்கு இடுபொருள் இவ்வழியாகதான் எடுத்து செல்ல வேண்டும். அதேபோல் அவர்கள் விளைவித்த நெல்களை இந்த சாலை வழியாகதான் கொண்டு வரவேண்டும். இப்படி முக்கியத்துவமும் அவசியமும் வாய்ந்த இந்த சாலை சுமார் 12 வருடங்களுக்கு மேலாக தார் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிகிறது. பல பகுதி சாலை சாலை இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் மண் சாலையாக உள்ளது.

பல இடங்களில் சாலை இருப்பக்கமும் ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளது. அதேபோல் சாலை நெடுவேங்கும் இருபுறமும் கருவை மரங்கள் படர்ந்து அபாயகரமான சாலையாக உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் அனைத்து மக்களும் மிகப்பெரிய சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இரவில் செல்ல மிகவும் அச்சம் அடைகின்றனர். கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியாளர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுக்கொள்ள வில்லை. எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் சரவணன் கூறுகையில், குன்னலூர் தாய் கிராமத்திலிருந்து தர்க்காசு வரையுள்ள சாலை இப்படி மக்கள் பயன்படுத்த முடியாதளவில் உள்ளதால் மக்கள் பல்வேறு வகையில் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். உடன் அரசு துரித நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்றார்.

You may also like

Leave a Comment

14 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi