திருவாரூர் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

திருவாரூர், ஜூலை 2: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வடகண்டம் என்ற இடத்தில் வசித்து வருபவர் ஹசன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஹபிப் நிஷா (31) நேற்று திருவாரூர் அருகே பவித்திர மாணிக்கத்தில் இயங்கி வரும் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றில் நேற்று காலை பயணம் செய்துள்ளார்.

அப்போது பவித்திரமாணிக்கத்தை நெருங்கியவுடன் இறங்குவதற்காக தயார் நிலையில் நின்று கொண்டிருந்தார்.அப்போது வளைவு ஒன்றில் பேருந்து திரும்பிய போது எதிர்பாராத உள்ளே இருந்த ஹபிப் நிஷா வெளியே சாலையில் திடீரென விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார. இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனியார் பேருந்து டிரைவரிடம் இது குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை