திருவாடானையில் நாளை மின் நிறுத்தம்

 

திருவாடானை,செப்.2: திருவாடானை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாடானை துணை மின் நிலையம் மற்றும் நகரிகாத்தான் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிக்கத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனுர், எட்டுகுடி, மல்லனூர், ஆண்டாஊரணி, ஓரியூர், சிறுகம்பையூர், அரசூர், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூர், திருவிடைமதியூர், பதனக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்