திருவாடானையில் நகை திருடிய வாலிபர் கைது

 

திருவாடானை, ஜூன் 19: திருவாடானையில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவாடானை சினேகவல்லிபுரத்தை சேர்ந்தவர் கேசவன்(40).டெய்லர். கடந்த 15ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்று விட்டார். மதியம் மீண்டும் வீட்டுக்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து தோடு, மூக்குத்தி, மோதிரம் உட்பட நான்கு பவுன் தங்க நகை திருடு போயிருந்தது.

இதுகுறித்து திருவாடானை போலீசில் கேசவன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மதுரை நாகமலை புதுக்கோட்டை சேர்ந்த முருகன் மகன் சக்திவேல் குமார்(29) என்பவரை கைது செய்து திருடு போன நகைகளை பறிமுதல் செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை