திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம்: திருத்தணி எம்.பூபதி அறிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம் வரும் 11ம் தேதி மாலை 4 மணியளவில் திருத்தணியில், அரக்கோணம் சாலை என்எஸ்கே டவரில் எனது தலைமையில் நடக்கிறது. இதில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். மேற்கு மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வி.கிஷோர் ரெட்டி அனைவரையும் வரவேற்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைமை வழக்கறிஞரும் மண்டல ஒருங்கிணைப்பாளருமான ப.முத்துக்குமரன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்க உள்ளார். மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர்கள், தொகுதி வழக்கறிஞரணி பொறுப்பாளர்கள், காவல்நிலைய வழக்கறிஞரணி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 4வது இடம்தான் என்பதால் அதிமுக போட்டியிடவில்லை: அழிவுக்கு ஜெயக்குமார்தான் காரணம்

பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாம்; புதுச்சேரி முதல்வருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு: புதிய கூட்டணி ஆட்சிக்கு முயற்சியா?

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு