திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர், ஆய்வுக்கூட நுட்புநர், நுண்கதிர் வீச்சாளர்கள் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்கு தற்காலிகமாக மாதம் ரூ.12 ஆயிரம் வீதம் 6 மாதங்களுக்கு மட்டும் பணியமர்த்தப்பட உள்ளனர். அதன்படி மருந்தாளுனர்- 6,  ஆய்வக நுட்புநர்- 6, நுண்கதிர் வீச்சாளர்- 6 பேரும் தேவைப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பங்களை வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, திருவள்ளூர் ஜெ.என். சாலையில் உள்ள மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை