திருவள்ளூரில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: கட்சியினர் சர்வமத பிரார்த்தனை

திருவள்ளூர்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உடல் நலம் பெற்று நீண்ட நாள் வாழ வேண்டி திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சர்வமத பிரார்த்தனை செய்தனர்.  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி பிறந்த நாளை முன்னிட்டும் அவருக்கு நீடிய ஆயுள் உடல் நலத்தோடு வாழ வேண்டியும் மற்றும் சோனியா காந்தி உடல் நலம் பெற்று நீண்ட நாள் வாழ வேண்டியும் திருவள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில், புனித பிரான்சிஸ் சலேசியர் தேவாலயம் மற்றும் இஸ்லாமிய தொழுகை கூடத்திலும் சர்வமத பிரார்த்தனை செய்தனர்.  இந்த பிரார்த்தனைகளில் மாநில துணை தலைவர் ஏகாட்டூர் ஆனந்தன், மாநில செயலாளர் சி.பி.மோகன்தாஸ், மாவட்ட துணைத்தலைவர் ஜே.டி.அருள்மொழி, எஸ்.சரஸ்வதி, வட்டார தலைவர் ஜி.எம்.பழனி, ஆர்.ராஜா, டி.வடிவேலு வி.எம்.தாஸ், என்.ராஜராஜன், எஸ்.ராஜன், ஆர்.ஸ்டாலின், ஜெ.ஜனார்த்தனம் வக்கீல் சீனிவாச ராகவன், சி.பி.சத்யா, அன்பு பழனி, கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்