திருவனந்தபுரத்தில் விவசாய தினவிழா வேளாண் ஊழியர்களுக்கு கேரள அரசு விருது

 

பாலக்காடு, ஆக.19: திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விவசாய தின விழாவில் பாலக்காட்டில் உள்ள ஆலத்தூர் வேளாண் அலுவலக ஊழியர்களுக்கு சிறந்த சேவைக்கான மாநில அரசின் விருது வழங்கப்பட்டது. திருவனந்தபுரம் நிஷாகாந்தி கலையரங்கில் விவசாய தின விழா நடைபெற்றது. இதில், பாலக்காட்டில் உள்ள ஆலத்தூர் வேளாண் அலுவலக ஊழியர்களுக்கு விவசாயத்தில் சிறந்த சேவைக்கான மாநில அரசின் விருது வழங்கப்பட்டது.

முன்னாள் வேளாண் துறை அமைச்சர் வி.வி.ராகவன் நினைவாக எம்எல்ஏ பிரசேணன் தலைமையில் கேரள வேளாண் துறை அமைச்சர் பிரசாத் ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கம், நினைவு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து அவர் ஆலத்தூர் தாலுகாவில் விவசாயினர் மேம்பாட்டுக்காக சிறந்த சேவைகள் புரிந்த ஊழியர்களை பாராட்டி பேசினார்.

Related posts

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி சிப்காட் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

விக்கிரவாண்டி தொகுதியை சார்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு