திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயனுக்கு பதக்கம் டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு துப்பாக்கிச் சுடும் போட்டியில்

திருவண்ணாமலை, ஜூன் 16: தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில், திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் மாநில அளவில் 2ம் இடம் பிடித்து பதக்கம் வென்றுள்ளார். தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி, நேற்று முன்தினம் சென்னை கமாண்டோ துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடந்தது. பல்வேறு சுற்றுகளாக நடந்த இப்போட்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதில், இறுதிச் சுற்றுவரை முன்னேறி, முதல் பரிசை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவும், இரண்டாம் இடத்தை திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயனும் பெற்றுள்ளனர். அதையொட்டி, 2ம் இடத்தை பிடித்த எஸ்பி கார்த்திகேயனுக்கு பதக்கம் மற்றும் பராட்டுச் சான்றுகளை டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார். பதக்கம் வென்ற எஸ்பி கார்த்திகேயனுக்கு, வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உள்ளிட்டோர வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை