திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்குபோட்டு சாவு

 

புவனகிரி, ஆக. 5: புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சங்கீதா(22). இவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.இந்நிலையில் நேற்றுமுன்தினம் சங்கீதா வீட்டின் உத்திரத்தில் புடவையால் தூக்கில் தொங்கியுள்ளார். எதற்காக இறந்தார் என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து அவரது தாய் வசந்தி புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இறந்த சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கீதா எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வத்திராயிருப்பில் மருத்துவமனையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தீயில் மரங்கள் எரிந்து நாசம்

சித்தர் கோயில் ஜெயந்தி விழா