திருமங்கலம் பகுதியில் கத்திமுனையில் மக்களை மிரட்டிய வாலிபர் கைது

அண்ணாநகர்: சென்னை  திருமங்கலம் பாடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ்(18). இவர் நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை விரட்டினார். வீட்டில் இருந்தவர்கள் வந்து கேட்டபோது அவர்களை சுற்றிவளைத்து  வெட்டுவதற்கு முயன்றார். பொதுமக்கள் கொடுத்த தகவல்படி, திருமங்கலம் போலீசார் சென்று யுவராஜை ேதடியபோது வீட்டுக்கு சென்று உடையை மாற்றிக்கொண்டு தப்ப முயன்றார். அப்போது அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து காவல்நிலையத்துக்கு கொண்டுசெல்ல முடிவு செய்தனர். அப்போது திடீரென போலீசாரின் பிடியிலிருந்து யுவராஜ் தப்பிச் சென்றுவிட்டார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து யுவராஜை பிடிக்க திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன், ஆய்வாளர் சிபுகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்றிரவு மதுரவாயல் ரயில் நகர் பகுதியில் பதுங்கியிருந்த யுவராஜை கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். …

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது