திருமங்கலம் நகரின் தூய்மை பணிக்கு புதிய வாகனங்கள்: நகராட்சி தலைவர் துவக்கி வைத்தார்

 

திருமங்கலம், ஜூலை 25: திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகராட்சி சார்பில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை வாங்கி வருகின்றனர். இந்த குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த தூய்மை பணிக்காக ஏற்கனவே 6 மினிவேன்கள் உள்ளன. நகரின் அனைத்து இடங்களுக்கு பேட்டரி மூன்று சக்கர வாகனங்களுடன் இந்த மினிவேன்களும் சென்று குப்பைகளை ஏற்றி வருகின்றன.

இந்நிலையில் திருமங்கலம் நகராட்சியின் தேவை கருதி தமிழக தற்போது புதியதாக ரூ.25 லட்சம் மதிப்புள்ள மூன்று நவீன மினிவேன்களை வழங்கியுள்ளது. இந்த வாகனங்களை நேற்று நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் நித்யா, குழுத்தலைவர் ஜஸ்டின்திரவியம், கவுன்சிலர்கள் சின்னசாமி, வீரக்குமார், திருக்குமார், சுகாதார அலுவலர் சண்முகவேல், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை