திருமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் திமுகவில் 7 ஆயிரத்தை கடந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கை: மாவட்ட செயலாளர் பாராட்டு

 

திருமங்கலம், மே 5: திருமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் 7 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளவர்களுக்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் பாரட்டு தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுகவில் மேலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மதுரை தெற்கு மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் அறிவுறுத்தலின்படி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளை ஒன்றிய நிர்வாகிகள் விரைவாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் 6,500 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கினை கடந்து கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் 7000 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்த்துள்ளார். திருமங்கலம் திமுக அலுவலகத்தின் 7 ஆயிரம் புதிய உறுப்பினர் படிவங்களை தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறனிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் ஒப்படைத்தார். குறுகிய காலத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்து இலக்கினை எட்டிய திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளரை மாவட்ட செயலாளர் பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் கிருத்திகா, முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம், வில்லூர் ஞானசேகரன், எழுமலை பேரூராட்சி தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை