திருமங்கலம் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை

திருமங்கலம், ஆக. 3: திருமங்கலம் அருகேயுள்ள மேலஉரப்பனூரினை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் அஜித்குமார் (27). திருமங்கலம் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அஜித்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த திருமங்கலம் டவுன் போலீசார் இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை