திருமங்கலம் அருகே தீ விபத்து ரூ.15 லட்சம் மதிப்பு பொருட்கள் நாசம்

திருமங்கலம், ஆக. 2: திருமங்கலம் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டை விலக்கு பகுதியில் ஜின்னிங் பேக்டரி அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 30 ஆயிரம் குவிண்டால் மிக்சிங் பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன. மேலும் மிக்சிங் பஞ்சு செலுத்தும் இயந்திரங்கள், 60 டியூப் லைட்டுகள் எரிந்து நாசமாகி விட்டன. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சமாகும். ஆனால் பணியாளர்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இதுகுறித்து நிறுவன உரிமையாளர் நாராயணசாமி அளித்த புகாரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை