Sunday, October 6, 2024
Home » திருப்போரூர் கந்தசுவாமி கோயில் பிரமோற்சவம்: 17ம் தேதி கொடியேற்றம்: 23ல் தேரோட்டம்

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் பிரமோற்சவம்: 17ம் தேதி கொடியேற்றம்: 23ல் தேரோட்டம்

by kannappan

திருப்போரூர்: திருப்போரூர்  கந்தசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத பிரமோற்சவம் 13 நாட்கள் நடக்கும். கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயில், கடந்த நவம்பரில் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தாண்டு மாசி பிரமோற்சவ விழாவை நடத்த கோயில் நிர்வாகம், அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்டது. அதற்கு, விழா நடத்த அனுமதியளித்தது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பிரமோற்சவ விழாவை பாதுகாப்புடன் நடத்த, அனைத்து துறை ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்நிலையில் மாசி பிரமோற்சவ விழாவின் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டது. வரும் 17ம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகி இரவு 8 மணிக்கு கிளி வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா, மறுநாள் 18ம் தேதி காலை தொட்டி உற்சவம், இரவு பூத வாகன வீதியுலா நடக்கிறது. 19ம் தேதி காலை புருஷாமிருக உபதேச உற்சவம், இரவு வெள்ளி அன்னவாகன வீதியுலா, 20ம் தேதி ஆட்டுக்கிடா வாகன உற்சவம், இரவு வெள்ளி மயில்வாகன வீதியுலா, 21ம் தேதி பகலில் மங்களகிரி உற்சவம், இரவு தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு, 22ம் தேதி காலை தொட்டி உற்சவம், இரவு யானை வாகன வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 23ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 24ம் தேதி காலை வெள்ளித்தொட்டி உற்சவமும், மாலை 5 மணிக்கு ஆலத்தூர் கிராமத்துக்கு முத்துக்குமாரசாமி எழுந்தருளி பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு குதிரை வாகனத்தில் வீதியுலா, 25ம் தேதி காலை விமான உற்சவம், இரவு சிம்ம வாகனத்தில் ஆறுமுக சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் வீதியுலா நடக்கிறது.26ம் தேதி காலை வெள்ளித் தொட்டி உற்சவம், பகல் 12 மணிக்கு சரவணப் பொய்கையில் தீர்த்தவாரி, மாலை 7 மணிக்கு தெப்ப உற்சவம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 27ம் தேதி மாலை கிரிவல உற்சவம், இரவு பந்தம்பரி உற்சவம், பிப்ரவரி 28ம் தேதி மாலை வேடர்பரி உற்சவம், இரவு முருகப்பெருமான் வள்ளியை மணம் முடிக்கும் திருக்கல்யாண உற்சவம், அதையடுத்து மார்ச் 1ம் தேதி காலை 6 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் மணக்கோலத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடைபெற்று பிரமோற்சவ விழா நிறைவடைகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்….

You may also like

Leave a Comment

12 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi