திருப்போரூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு

திருப்போரூர், ஆக.29: வங்கதேசத்தில் இந்துக்கள் பாதிக்கப்படுவதாக கூறி திருப்போரூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பேசியதாகவும், உயர்நீதி மன்றத்தின் நிபந்தனைகளை மீறியதாகவும் இந்து முன்னணியைச் சேர்ந்த மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ராஜசேகர், ஜெய்சங்கர், பாலமுரளி உள்ளிட்ட 13 பேர் மீது திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்