திருப்பூர், ஜூலை 8: திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான க.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை, உலகமெங்கும் சிறப்பாக கொண்டாட வேண்டுமென்ற தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருப்பூர் வடக்கு மாவட்டம், வடக்கு மாநகரம் சார்பில், இன்று (8ம் தேதி) மாலை 6 மணிக்கு, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்.நகரில் சிறப்பு பட்டிமன்றமும், தெற்கு மாநகர திமுக சார்பில் நாளை (9ம் தேதி) காலை 9 மணிக்கு பல்லடம் ரோடு ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் ‘சுழலும் சொல்லரங்கம்’ ஆகிய நிகழ்ச்சிகள் எனது தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி..மு.நாகராசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு அரசு கொறடா கோவி.செழியன் நடுவராகவும், கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கரூர் முரளி, தலைமைக் கழக பேச்சாளர்கள் சைதை சாதிக், தூத்துக்குடி சரத்பாலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் பங்கேற்க உள்ளனர். அதுசமயம் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.