திருப்பூர் மாவட்டத்தில் 24 டாஸ்மாக் கடைகள் மூடல்

 

திருப்பூர், ஜூன்22: தமிழகம் முழுவதும் கோவில், பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500 டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் 78 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. அதன்படி கோவை வடக்கு பகுதியில் 10, தெற்கு பகுதியில் 10 மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 24 டாஸ்மாக் கடைகள், ஈரோட்டில் 24. நீலகிரியில் 3 மற்றும் கரூரில் 7 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மூடப்படுகிற டாஸ்மாக் கடைகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த கடைகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை