திருப்பூரில் வங்கதேச வாலிபர்கள் 3 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி வங்கதேசத்தை சேர்ந்த வாலிபர்கள் தங்கியிருப்பதாக நேற்று வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சென்று சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், வங்கதேசத்தை சேர்ந்த அல் அமின் (28), ரோகிம் மியா (22), ரியாது மோனி (21) என்பதும், இவர்கள் மேற்கு வங்கம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரியவந்தது. எவ்வித ஆவணமும் இல்லாததால் 3 பேரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்….

Related posts

தாயுடன் மீனவர் உல்லாசம் அடித்து கொன்ற மகன்கள்: தன்னுடன் தொடர்பை கைவிட்டதால் போட்டு கொடுத்த முதியவர்

அதிமுக மாஜி கவுன்சிலர் சரமாரி வெட்டி கொலை: சென்னையில் பதுங்கிய 3 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவனிடம் செல்போன் பறிப்பு: ரவுடி, சிறுவன் கைது