திருப்பூரில் தேர்தல் பிரசாரம் எடப்பாடி பேசிய மேடையில் ஏறிய போதை வாலிபரால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று மாலை தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ”உள்ளாட்சி அமைப்பு என்பது மக்களோடு நேரடி தொடர்புடையது. மாநகராட்சியில் உள்ள எம்எல்ஏவை விட, மேயருக்கு அதிகாரம் அதிகம். அதிகாரம் படைத்த பதவியை நாம் வென்றெடுக்க வேண்டும் என்றார். எடப்பாடிக்கு மேடையில் பலரும் சால்வைகள் அணிவித்தும், மலர்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். அப்போது திடீரென ஒரு வாலிபர் மதுபோதையில் மேடையில் ஏறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபரை  கட்சியினர் கீழே அழைத்து சென்றனர்….

Related posts

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்