திருப்புவனத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்: தமிழரசி எம்எல்ஏ பங்கேற்பு

 

சிவகங்கை, ஜன.6: திருப்புவனத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கும் 2 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. இம்முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன் வரவேற்றார். மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட வட்ட வழங்க அலுவலர் சபிதாபேகம், மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன், தாசில்தார் விஜயகுமார், சமூக நல திட்ட அலுவலர் தனலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், திமுக ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்விரவி, ராமலட்சுமி பாலகிருஷ்ணன், மாரிதாசன், கண்ணன், பாலகிருஷ்ணன், வேல்பாண்டி, சித்ராஆறுமுகம், செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை