திருப்புத்தூர் சாலை விபத்தில் முதியவர் பலி; 3 பேர் படுகாயம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பொன்னாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு மகன் வெள்ளைச்சாமி (52). இவர் திருப்புத்தூர்-சிவகங்கை சாலையில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை கடைக்கு வெளியே வந்துள்ளார். அப்போது, அந்த வழியாக திருப்புத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த விஜயன் மகன் நாராயணன் (22) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் வெள்ளைச்சாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வெள்ளைச்சாமி திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதில் காயமடைந்த நாராயணன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதே போன்று, கீரணிப்பட்டியைச் சேர்ந்த ஜெயப்பிரியன் (17), மணிகண்டபிரபு (22) ஆகிய இருவரும் நேற்று டூவீலரில் திருப்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது தி.புதுப்பட்டி அருகே வரும் பொழுது எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்துக்கள் குறித்து திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை