சென்னை: தேர்வுகளை நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாணவர்கள் வருகையை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும். திருத்தப்பட்ட விடைத்தாளை தலைமை ஆசிரியர் ஆய்வு செய்ய வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விடைத்தாள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதால் எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் மதிப்பீடு செய்ய வேண்டும். மதிப்பெண்கள் சரியாக இருக்கிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். விடைத்தாள்களில் இடம் பெற்ற விடைகளுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களில் தவறுகள் ஏற்பட்டால், அதற்கு மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களே முழுப் பொறுப்பாவார்கள். …