திருப்பரங்குன்றம் அருகே பழைய மர குடோனில் திடீர் தீ விபத்து

திருப்பரங்குன்றம், மே 9: திருப்பரங்குன்றம் அருகே பசுமலை மூலக்கரை பகுதியில் பழைய மரங்கள், மர சாமான்கள் வைக்கப்பட்டுள்ள குடோன் உள்ளது. தற்போது உபயோகத்தில் இல்லாத இந்த குடோன் அருகே நேற்று இரவு சுமார் 7 மணியளவில் திடீரென தீப்பற்றியது. இதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்ற போது, அருகில் இருந்த மர குடோனுக்கு தீ பரவியது. தீ விபத்து குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் தீயணைப்பு வாகனம் ஏற்கனவே வெள்ளக்கல் பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால், தல்லாகுளம் நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை