திருப்பரங்குன்றத்தில் ஓய்வூதியதாரர் சங்க கூட்டம்

திருப்பரங்குன்றம், ஜூன் 21: மதுரை திருநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியதாரர் சங்க கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் தினகர் சாமி, தனபாண்டியன், எர்னஸ்ட் தேவராஜ், சாந்தி, பிச்சுமணி, பாலசுப்பிரமணியன், நாராயணன், பன்னீர் செல்வம், நடராஜன், பானு, கிருஷ்ணன், பாலவர்மராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நிலுவை இல்லாமல் அகவிலைப்படியை பெற்று தந்த மாநில, மாவட்ட சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தால் பிடித்தம் செய்யப்பட்ட கணக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும், திருநகர் 2, 3 ஆகிய பஸ் நிறுத்த சந்திப்பில் சிக்னல் அமைக்க வேண்டும், திருப்பரங்குன்றம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். மல்யுத்த வீரர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த பஜக எம்பி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை