Saturday, October 5, 2024
Home » திருப்பத்தூர் தொகுதிக்கான பாக முகவர்கள் கூட்டம் இன்று காலை நடக்கிறது அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தகவல்

திருப்பத்தூர் தொகுதிக்கான பாக முகவர்கள் கூட்டம் இன்று காலை நடக்கிறது அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தகவல்

by Karthik Yash

காரைக்குடி, ஆக.3: திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு மாலை 4 மணிக்கு பதில் இன்று காலை 10 மணிக்கு நடக்கவுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர், மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ‘‘சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகளிலும், தொகுதி வாரியாக பாகமுகவர்கள்(பிஎல்ஏ 2) கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 30ம் தேதி சிவகங்கை சட்டமன்ற தொகுதி, மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் நடத்தி முடிக்கப்பட்டது.

இன்று (ஆக.3ம் தேதி) காலை 11 மணிக்கு காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு, காரைக்குடியில் உள்ள அபூர்வா மகாலில் நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு, திருப்பத்தூரில் உள்ள செந்தாமணி மகாலில் நடக்க இருந்தது. இந்நிலையில், இதில் சிறு மாற்றம் செய்யப்பட்டு காலை 10 மணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு, திருப்பத்தூரில் உள்ள செந்தாமணி மகாலில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பாக முகவர்கள்(பிஎல்ஏ 2) வாக நியமிக்கப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள் அந்தந்த பகுதி பாக முகவர்கள் பிஎல்ஏ 2 வாக நியமிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து கலந்து கொள்ள செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi