திருப்பதி மாவட்டம் இன்று உதயமாகிறது-பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பதி : திருப்பதி புதிய மாவட்டம் இன்று உதயமாகியது. பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே 13 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், நிர்வாக பணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாவட்டங்களை  பிரிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதில், சித்தூர் மாவட்டத்தில் இருந்து திருப்பதி மண்டலத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தவுடன் ஆந்திரா மாநிலத்தில் புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.தொடர்ந்து, அந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் பதவி ஏற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வந்தார். சந்திரபாபு முதல்வராக இருந்தபோது ஆந்திராவின் தலைநகராக அமராவதியை தலைநகராக அறிவித்து, பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜெகன்மோகன் பதவி ஏற்றவுடன் ஆந்திராவின் தலைநகராக 3 இடங்களை அறிவித்தார். தொடர்ந்து, ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் 2ஆக பிரிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், தெலுங்கு வருட பிறப்பு நாளில் புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.அதன்படி, ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள்  பிரிக்கப்பட்டு 26 மாவட்டங்களாக இன்று முதல் உதயமாகிறது. மேலும், புதிதாக உதயமாக உள்ள மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சித்தூர் மாவட்டத்தை 2ஆக பிரித்து திருப்பதி நகரை தலைமையிடமாக கொண்டு திருப்பதி மாவட்டம்  செயல்பட உள்ளது. திருப்பதி மாவட்ட புதிய கலெக்டராக வெங்கட்ரமண ரெட்டி மற்றும் எஸ்பியாக பரமேஷ்வர் ரெட்டி  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருச்சானூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தாமிநேடு பகுதியில் உள்ள பத்மாவதி நிலையம் தற்காலிகமாக திருப்பதி கலெக்டர் அலுவலகமாக செயல்படுகிறது. மேலும், புதிய திருப்பதி மாவட்டத்தில் திருப்பதி, காளஹஸ்தி, கூடூர், சூலூர்பேட்டை ஆகிய 4 வருவாய் கோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.திருப்பதி தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என பொதுமக்களின் பல ஆண்டுகால ேகாரிக்கை நிறைவேறியுள்ளதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

Related posts

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்

பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்

கியூட் தேர்வு முடிவு தாமதம்: என்டிஏ மீது காங். சாடல்