திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் அரசு கட்டிடத்தின் கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று முதன்மை செயலாளர் கோபாலகிருஷ்ண திவேதி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் கோபாலகிருஷ்ண திவேதி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் திருப்பதி கலெக்டர் அலுவலகத்திலிருந்து கலெக்டர் வெங்கடரமணா கலந்து கொண்டார். கூட்டத்தில், முதன்மை செயலாளர் கோபாலகிருஷ்ண திவேதி பேசியதாவது: அரசு கட்டிடங்கள் கட்ட நிலம் கையகப்படுத்தும் பணியை கள அளவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலக்குகள், பஞ்சாயத்து ராஜ் இன்ஜினியரிங் துறையினர், கட்டிடம் கட்டுவது தொடர்பான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிட கட்டுமானங்கள் தொடர்பான பில்கள் நிலுவையில் இருந்தால் அவற்றை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். விவசாய பரோசா கேந்திராக்கள், கிராம செயலகங்கள், கிராம சுகாதார மையங்கள் போன்ற அரசு முன்னுரிமை கட்டிடங்களின் கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, கலெக்டர் வெங்கடரமணா பேசுகையில், ‘மாவட்டத்தில் 434 விவசாய பரோசா மையங்கள், 222 விவசாய பரோசா மையங்கள், 482 கிராம செயலக கட்டிடங்கள், 320 கிராம செயலக கட்டிடங்கள், 388 கிராம சுகாதார மையங்கள், 138 கிராம சுகாதார மையங்கள் கட்டப்படும். சம்பந்தப்பட்ட பணிகளை முன்னேற்றம் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் வீடு வீடாக குழாய் இணைப்புகள் மற்றும் இதர பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும்’ என்றார்….