திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் தொடங்கியது முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனால், நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.நேற்றைய நிலவரப்படி திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகள் நிரம்பியது. இதனால், சுமார் 30 மணிநேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் உண்டியலில் ரூ.5.65 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். …