ஏரல், மார்ச்16: ஏரல் அருகேயுள்ள திருப்பணிசெட்டிகுளம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடந்தது. கூட்டத்திற்கு பால்கனி தலைமை வகித்தார். கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவில் பஞ்சாயத்து செயலர் இந்துமதி நன்றி கூறினார்.