திருப்பட்டினத்தில் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால்,டிச.23: காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் வடக்கு வாஞ்சூர் கிராமத்தில் சென்னை சவீதா சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிரவி திருபட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக. தியாகராஜன் கலந்து கொண்டு தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் சட்டங்கள், செயலமைப்புகள், நெறிமுறைகள் ஆகியவை குறித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இளமுருகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை