திருநாகேஸ்வரம் கோயில் ஊழியர்களிடம் தகராறு செய்த 3 பேர் கைது

 

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் ஊழியர்களிடம் தகராறு செய்ததாக இந்து மக்கள் கட்சி பிரமுகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருநாகேஸ்வரம் மணல்மேடு தெருவில் வசிப்பவர் கணேசன் மகன் ஹரி (30). இந்து மக்கள் கட்சியின் திருவிடைமருதூர் ஒன்றிய இளைஞர் அணி தலைவர்.

இவர் நேற்று திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதர் சுவாமி கோயில் அலுவலகத்துக்கு தனது கூட்டாளிகள், அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (28), மணிகண்டன் (32) ஆகியோருடன் சென்று ஊழியர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அலுவலக கண்காணிப்பாளர் புகழேந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததால் தெரிகிறது. இதுகுறித்து கோயில் உதவி ஆணையர் உமாதேவி கொடுத்த புகாரின் பேரில் திருநீலக்குடி போலீசார் வழக்கு பதிந்து ஹரி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்